ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தவே பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் பாதுகாப்பு படை ஒருவர் காயம் அடைந்தார். 


இது குறித்து இன்னும் முழுமையான தகவல் எதுவும் வெளிவரவில்லை.