குர்மித் ராம் ரஹிம் சிங்குக்கு இன்று தீர்ப்பு அறிவிக்கப்படுவதை ஒட்டி ஹரியானா மற்றும் சுற்றுபுற மானிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேரா சச்சா சவுதா என்ற சமூக நல - ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம். பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராம் ரஹிம் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.


இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் ரோதக் மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கலவரம் வெடித்தது. இதில் சுமார் 36 பேர் பலியாகினர். 


இதற்கிடையில் கலவரத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய குர்மீத்தின் சொத்தை பறிமுதல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்று தீர்ப்பு வாசிப்பதற்காக, சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங் ரோதக் சிறைக்கு செல்கிறார்.


கோர்ட் நடவடிக்கைகள் அனைத்தும் சிறை வளாகத்திற்குள்ளேயே நடத்தி முடிக்கப்படும். இதனால் கலவரம் ஏற்படாமல் தடுக்க, ஹரியானாவின் பஞ்ச்குலா, சண்டிகர், மொஹாலி ஆகிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஹரியானா அரசுக்கு பஞ்சாப்-hரியானா ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதை தொடர்ந்து மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.


இந்நிலையில், தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சுனாரியா சிறை அமைந்துள்ள ரோதக் நகர் முழுவதும் பல்வேறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


வன்முறை மற்றும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அரியானாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல பஞ்சாப்பில் மால்வா பிரதேசத்தில் அடங்கியுள்ள 13 மாவட்டங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. மேலும், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


மேலும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. குர்மீத் ராமிற்கு நெருங்கிய 100 பேரைப் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.


மாநிலப் போலீசாருடன் இணைந்து, ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.