இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலத்தில், 33 மாவட்டங்கள், 182 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலதிற்கு  டிசம்பர் 9 ,முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டமாக வருகிற 14-ம் தேதிகளில் 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதை தொடர்ந்து, குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 


தற்போது, ஹர்திக் படேல் சட்டசபை தேர்தலுக்காக அஹமதாபாத்தில் சைக்கிள் பேரணியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில்;-


மக்களிடமிருந்து எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் வெற்றி அடைவது உறுதி என்று தெரவித்தார்.