ஹரியாணா மாநிலத்தின் அரசுப் பணியில் சேர உயர்ந்தபட்ச வயதுவரம்பு 40-லிருந்து 42-ஆக உயர்த்தப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்... ''அரசுப் பணியில் சேர்வதற்கான உயர்ந்தபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்ட உத்தரவு, அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.


வயது உச்ச வரம்பினை உயர்த்துவது தொடர்பான உத்தரவினை தங்கள் பணியாளருக்கான விதிகளில் அதற்குண்டான தகுந்த அளவுகளில் பொருத்திக் கொள்ளுமாறு அனைத்து துறைகளுக்கும் அறிவுருத்தப்பட்டுள்ளது.


இது சம்பந்தமாக தனியே அமைச்சரவை, பொது நிர்வாகம், நிதித்துறை மற்றும் ஹரியாணா அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஹரியாணா பணியாளர் தேர்வுக்குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் முன்னதாகவே இந்த ஆண்டு மே 30 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனைத்து ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டன.


இச்சட்டம் உடனடியாக அமலுக்கு வரும்வகையில் தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறை நிர்வாகங்கள், அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அம்பாலா, ஹிசார், ரோதக் மற்றும் குர்கான் கோட்டங்களின் ஆணையர்கள், அனைத்து தலைமை அதிகாரிகள், மற்றும் நிர்வாக இயக்குநர்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் பொதுத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள், துணை ஆணையர்கள், உதவி கோட்ட அலுவலர்கள், மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் தலைமைச் செயலாளர்களுக்கு இந்த உத்தரவு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.