நாளை மாலை முதல் ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை வரை உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட உள்ளன. இந்தியாவிலும் பல்வேறு நகரங்களில் நாளை புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மக்கள் பொது இடங்களில் அதிகம் கூட வாய்ப்புள்ளது என்பதால், பல்வேறு மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சென்னையில் நாளை நள்ளிரவு 12 மணிக்கு மேல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மும்பையிலும் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Molnupiravir: கொரோனா மருந்தை எங்கே வாங்கலாம்; விலை என்ன..!!!


அதேநேரத்தில், மும்பையில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் இத்தகைய திட்டங்களை தீவிரவாதிகள் தீட்டியிருப்பதாக கூறப்படுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் இருக்கும் காவல்துறையினர் அனைவருக்கும் லீவு ரத்து செய்யப்பட்டு, அவர்கள் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 


குறிப்பாக, மும்பையில் இருக்கும் ரயில் நிலையங்கள், முக்கிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மும்பை, தாதர், பாந்த்ரா, சர்ஜ்கேட் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் முழுவதும் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ALSO READ | Happy New Year! குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்!! புதுவையின் புத்தாண்டு சலுகை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR