சிபிஐ இயக்குனர் அலாக் வர்மாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து, புதிய சிபிஐ தலைவருக்கு போட்டிபோடும் ஐபிஎஸ் அதிகாரிகள்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CBI இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கு இணையாக சிறப்பு இயக்குநர் என்ற பதவியில் ராகேஷ் அஸ்தானாவை மத்திய அரசு நியமித்தது. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல், ஒரு கட்டத்தில் உச்சம் அடைந்தது. இதனையடுத்து இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.


இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்தனர். இதையடுத்து, கட்டாய விடுமுறையில் உத்தரவை எதிர்த்து அலோக் வர்மா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா, CBI இயக்குநராக நீடிக்கலாம் என்று கூறி மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து 77 நாட்கள் விடுப்பபுக்கு பின்னர், நேற்றைய முன் தினம் அவர் மீண்டும் CBI இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்டார்.


உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து CBI இயக்குநர் பதவிக்கு திரும்பிய அலோக் வர்மா, தனது ஆதரவு அதிகாரிகளை இடமாற்றி இயக்குநர் பொறுப்பு வகித்த நாகேஷ்வர ராவ் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தார். மேலும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளையும் அவர் இடமாற்றம் செய்தார். 


இந்நிலையில், அலோக் வர்மவை நீக்குவது குறித்து, டெல்லியில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பங்கேற்ற நீதிபதி A.N.சிக்ரி அடங்கிய  மூவர் குழுவின் ஆலோசனை நடைபெற்றது.  


இதையடுத்து, அலோக் வர்மவை CBI-ல் இருந்து தீயணைப்பு துறைக்கு மாற்றி உத்தரவிட்டனர். CBI இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா ராஜினாமா செய்திருப்பதை அடுத்து, நான்கு IPS அதிகாரிகளின் பெயர்கள் அப்பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மும்பை காவல்துறை ஆணையர் சுபோத்குமார் ஜெய்ஸ்வால் மற்றும் உத்தரப் பிரதேச DGP O.P.சிங் ஆகியோரின் பெயர்கள் முன்னிலை வகிக்கின்றன.


முன்னதாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து CBI இயக்குனராக அலோக் வர்மா பதவியேற்றுக் கொண்டார். நாகேஸ்வர ராவ் பணியிட மாற்றம் செய்தவர்களை அதே பணிக்கு மாற்றி உத்தரவிட்டார்.


இந்நிலையில், நேற்று நடைபெற்ற சிறப்புக் குழு கூட்டத்திற்குப் பின், CBI  இயக்குனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அலோக் வர்மா தீயணைப்புத் துறை இயக்குனராக மாற்றப்பட்டார். இப்பொறுப்பில் ஒருநாள் கூட பணியை ஏற்க மறுத்துவிட்ட அலோக் வர்மா அரசுக்கு தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.