இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் விமானம் இன்று விபத்துக்குள்ளானது. விமானி அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் ஜாம் நகரில், இன்று காலை 9 மணி அளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானி சிறு காயங்களுடன் தப்பினார். விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விபத்துக் காலங்களில் விமானி தப்பிக்கும் பாதுகாப்பு அம்சம் சரியாக செயல்பட்டதால் விமானி உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டள்ளது.


இது போன்று கடந்த 5ம் தேதி இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிலதது குறிப்பிடத்தக்கது!. ஓரே வாரத்தில் இரண்டு விமான விபத்துக்கள் நடந்திருப்பது பாதுகாப்புத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.