ஒவ்வொரு நாளும் தான் வேதனையில் வாழ்ந்து வருவதாகவும், ஆனாலும் அதனை வெளியில் கூற முடியாது எனவும் கர்நாடக முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதனை பயன்படுத்தி எதிரணியில் இருந்த எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க BJP முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் இது பாஜகவிற்கு சாதகமாக அமைந்துவிட கூடாது என்பதற்காக இரு கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக இருக்க முடிவு செய்துள்ளனர். மேலும் காங்கிரஸ் - மஜத கூட்டணி குறித்து அவ்வபோது அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தனது வருத்தத்தை பதிவு செய்து வருகிறார்.


இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் HD குமாரசாமி கூறுகையில்; “வெளியில் இருந்து பார்த்தால் நான் முதலமைச்சர் மட்டும் தான் உங்களுக்கு தெரியும். ஆனால் தினம் தினம் நான் வேதனையை அனுபவித்து வருகிறேன். ஆனால் அந்த வலியை உங்களிடம் சொல்ல முடியாது. நான் உங்களிடம் கூறினால் மக்கள் பிரச்சனைகளை யார் சரிசெய்வது..? ஒரு மாநிலத்திற்கு பொறுப்பாக உள்ளதால் அதனை வெளியில் கூற முடியாது. அரசு நல்ல முறையில் இயங்க வேண்டும். அரசு பாதுகாப்பாக தான் உள்ளது என்று அதிகாரிகளிடம் நம்பிக்கையை கொண்டு வர வேண்டும். இவையெல்லாம் என் மீதுள்ள பொறுப்புக்கள்” என்று வேதனை தெரிவித்தார். 


இதற்க்கு முன்னதாக, கூட்டணி அரசாங்கத்தின் வேதனையைப் பற்றி பேசிய பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் குமாரசாமி உடைந்து போயிருந்தார். அப்போது கூறுகையில்; உங்கள் சகோதரர்களில் ஒருவர் முதல்வரானதால் என்னை விரும்புவதற்காக நீங்கள் பூங்கொத்துகளுடன் நிற்கிறீர்கள். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள், ஆனால் நான் இல்லை. கூட்டணி அரசாங்கத்தின் வலியை நான் அறிவேன். நான் விஸ்காந்த் (சிவன் பற்றிய குறிப்பு) ஆனேன், இந்த அரசாங்கத்தின் வலியை விழுங்கினேன் என அவர் தெரிவித்திருந்தார்.