டெல்லி நகரின் பல இடங்களில் இரண்டாவது நாளாக மழை பெய்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மண்டி ஹவுஸ் மற்றும் ஃபெரோஸ் ஷா சாலையில் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைத்து காணப்படுகிறது. 


டெல்லியில் கடந்த மூன்று மாதா காலம் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானிலை மாறி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும்,புறநகர் பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில், மீனம்பாக்கம், அனகாபுத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை தொடர் மழை பெய்து வருகிறது.


இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்..!


'தென்மேற்குப் பருவக்காற்று ஈரப்பதத்துடன் வீசிய காரணத்தாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் டெல்லியின் ஒரு சில பகுதிகளில் நேற்று மழை பெய்தது. அதே நிலை இன்றும் நீடிப்பதால் மழை தொடரும்.  டெல்லியைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.