நேற்று இரவு 10 மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மறைந்த நிர்வாகி ஷங்கர் சவதாஸ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார் அர்விந்த் கெஜ்ரிவால். ஆறுதல் கூறிவிட்டு வீட்டை விட்டு அவர் வெளியேறிய போது திடீரென ஒருவர் அவர் மீது மை வீசினார். மை வீசியாவரின் பெயர் தினேஷ் ஓஜா ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் தினேஷ் ஓஜாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஏவிபிவி அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பரதீய ஜனதாவுடன் தொடர்புடைய அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த சம்பவத்திற்கு பிறகு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “ஹூம்ம்ம்.... என் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். அவர்களை நான் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்து இருந்தார்