ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்- பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டில் 3 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்- பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு  நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் நான்கு ஹிஸ்புல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சண்டையில் இந்திய இராணுவத்தை சேர்ந்த மூன்று வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். இந்தியாவிற்கு எதிரான மறைமுக போரை ஊக்குவிக்கும் பாகிஸ்தான். பயங்கரவாதிகள் மூலம் இந்திய நிலைகள் மீது தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.