இந்தியர்களின் நினைவிலும், மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் அப்துல் கலாம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 


ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜெயினாலுபுதீன் - ஆஷியம்மாளுக்கு 7-வது மகனாக பிறந்தவர். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, தனது அசாத்திய திறமையாலும் கடின உழைப்பாலும் ஏவுகணை விஞ்ஞானியாக நாட்டுக்கு அரிய கண்டுபிடிப்புகளை வழங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.


ஏவுகணை நாயகனின் 87-வது பிறந்தநாளில் அவரை பெருமை படுத்தும் விதமாக பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது...



"ஒரு சிறந்த ஆசிரியர், அற்புதமான உந்துசக்தி, சிறந்த விஞ்ஞானி மற்றும் மாபெரும் தலைவர் மறைந்த ஜனாதிபதி டாக்டர் கலாம் அவர்கள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நினைவிலும் வாழ்ந்து வருகின்றார். அவரது பிறந்தநாளில் அவரை நினைவுகூற்வோம்" என குறிப்பிட்டுள்ளார்