எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட போவதில்லை என பாலிவுட் நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தாண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நடைப்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு நாட்டின் பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் சினிமா நட்சத்திரங்களில் யார் யாரெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய உள்ளனர், தேர்தலில் போட்டியிட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து பாலிவுட் நடிகை கரீனா கபூர் போட்டியிடுவார் எனவும், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் அவர் போட்டியிடுவார் எனவும் தகவல்கள் வெளியானது.


நடிகை கரீனா கபூருக்கு இளம் ரசிகர்கள் அதிகமாக உள்ளதால் அத்தொகுதியில் கரீனா எளிதில் வெற்றி பெறுவார் என கட்சி தலைமை நம்புவதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது. இந்த செய்திகள் பெரும் பரபரப்பியை ஏற்படுத்திய நிலையில் இந்த வதந்திகளுக்கு கரீன முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


தேர்தலில் தான் போட்டியிடுவதாக வந்த தகவலை கரீனா கபூர் மறுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தனது அரசியல் பயணம் குறித்து இதுவரை யாரும் தன்னிடம் அணுகவில்லை எனவும், தன்னுடைய கவனம் முழுவதும் திரையுலகில் மட்டுமே இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.