பள்ளி வாகனம் மீது கார்னி சேனாவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக குர்கான் பகுதியில் பள்ளி குழந்தைகள் வாகனம் மீது கார்னி சேனா குண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.


அப்போது பேருந்தில் இருந்த 2ம் வகுப்பு குழந்தைகள் முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.



இது குறித்து கூறிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்:-


நமது நாட்டின் தலைநகரத்தில் இருந்து சில கிலோ மீட்டருக்கு தொலைவில் நமது குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 


இந்த செய்தி நமது ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது,இதனை கேள்விபட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்றார்.