கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற செல்லப்பிராணியான நாயின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அப்போது 100 கிலோ கேட் வெட்டி நாயின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடுகளில் பிள்ளைகளை விட செல்லப் பராணிகளை பார்த்து பார்த்து வளர்க்கும் நபர்கள் பலர் உள்ளனர். அந்த செல்லப் பிராணிகளுக்கு என்று தனியாக வீடு, விலை உயர்ந்த உணவு, ஆடை என சொகுசான வாழ்கையை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். 


சமூக வலைதளங்களில் செல்லப் பிராணிகளின் அழகான வீடியோக்களும் அதிக லைக்குகளை குவிக்கும். நாய், பூனை போன்ற வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை நெசிக்காத நபர்கள் இருக்கவே முடியாது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த ஷிவப்பா எல்லப்பா என்ற நபர், தான் வளர்க்கும் க்ரிஷ் என்ற செல்ல நாயின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். 



வீட்டில் குழந்தைகளின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் எந்த அளவுக்கு இருக்குமோ அதையெல்லாம் ஒருபடி மிஞ்சும் அளவுக்கு அசத்தியுள்ளார் ஷிவப்பா. நண்பர்கள் உறவினர்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நாய் க்ரிஷின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அழைத்த ஷிவப்பா 100 கிலோ கேக் வெட்டி செல்ல நாயின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.


அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகியுள்ள நிலையில் நாய் க்ரிஷ்-விற்கு பலரும் தங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | கோத்ரா ரயில் எரிப்பு - பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe