ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடி சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையே ஒரு விசித்திரமான நிகழ்வு நடைபெற்றுள்ளது, இந்த நிகழ்வு நாடுமுழுவதும் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதென்ன நிகழ்வு?, விசித்திரமான முத்த பேட்டி தான் அது. இந்த போட்டியில் சட்டமன்ற உறுப்பினர் சைமன் மராண்டி தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜார்கண்ட் மாநிலத்தின் பாகூர் மாவட்டத்தில் உள்ள லிட்டிபாலா தொகுதியில் நடைபெற்ற சிடோ-கன்ஹு நிகழ்ச்சியில் சிறப்பு அங்கமாக இந்த நிகழ்வு நடைப்பெற்றுள்ளது.


இந்த முத்தப் போட்டியில் பங்கேற்றவர்கள் அப்பகுதி பழங்குடி சமூகத்திலிருக்கும் தம்பதிகள் ஆவர். 



இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்ற உறுப்பினர் சைமன் மராண்டி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


நிகழ்ச்சியின் பிற முக்கிய அம்சங்கள் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் விமர்சையாக இடம்பெறும்!