இந்தியா மிகப் பெரிய நாடு.  இங்குள்ள பல தரப்பட்ட பகுதிகளில் வாழும் சில மக்கள் இன்னும் மரபுவழி விதிகளை கடைபிடிப்பவர்களாக உள்ளனர். திருமணத்திற்கு முன்பு லிவ் இன் ரெலேஷஷிப் (Live In Relationship) எனப்படும் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தை நகரிலே சிலர் எதிர்க்கும் சூழ்நிலை உள்ளது. இது கலாச்சாரத்தை பாதிக்கும் விஷயம் என்றும், இது மேலை நாடுகளின் கலாச்சாரம் என்றும் பலர் எதிர்க்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு இடத்தில், திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது காட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். திருமணம் செய்து கொள்ளும் முன்பு அவர்கள் சேர்ந்து வழ்ந்திருக்க வேண்டும் ஒரு விதி உள்ளது.  விசித்திரமான இந்த சட்டம் கடைபிடிக்கப்படும் இந்த இடம் பழங்குடியினரின் இடமாகக் கருதப்படுகிறது. இது இன்னும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் பிரதான நீரோட்டத்தில் இணையாமல், தனி இனமாக வாழ்கிறார்கள் என்ற எண்ணம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெடுங்காலமாக பின்பற்றப்படும் சட்டம்


உண்மையில், இந்த பழங்குடியினரின் பெயர் முரியா அல்லது மூடியா பழங்குடி. இவர்கள் சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் வாழ்கிறார்கள். இந்த பழங்குடியினர் இந்த சட்டத்தை நெடுங்காலமாக  பின்பற்றி வருகிறார்கள் என கூறப்படுகிறது. இந்த விதியின் கீழ், திருமணம் செய்து கொள்ளும் முன் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் புரிந்து கொள்ள சேர்ந்து வாழ்கின்றனர். இதில், அவரது குடும்பமும் அவரது சமூகமும் அவருக்கு உதவுகின்றன. இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வீட்டிற்கு வெளியே ஒரு தற்காலிக வீடு கட்டித் தரப்படுகிறது.  இது கோட்டுல் என்று அழைக்கப்படுகிறது. இதில், இருவரும் சில நாட்கள் ஒன்றாக வாழ்கின்றனர்.


மேலும் படிக்க | இமயமலை பிரதேசத்தை எந்த நேரமும் பூகம்பம் தாக்கலாம்! எச்சரிக்கும் வல்லுநர்கள்


பரஸ்பரம் புரிந்து கொள்ள முயற்சி


கோட்டுல் மூங்கில் மற்றும் பந்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. கோட்டுல் ஒரு பெரிய முற்றம் உள்ள வீடு. உள்ளூரில் இது மூங்கில் மற்றும் மண்ணிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பழங்குடியினர், பஸ்தார்  மற்றும் சத்தீஸ்கரின் பிற பகுதிகளில் காணப்படுகிறார்கள். சில இடங்களில், அவை மடியா என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆணும் பெண்ணும் பரஸ்பரம் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்கிறார்கள். பரஸ்பரம் நேரத்தை செலவிடுகிறார்கள். சில நாட்கள் கழித்த பிறகு, இந்த இருவரும் தங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்கிறார்கள்.


பின்பற்றப்படும் சட்டம்


மற்றொரு ஊடக அறிக்கையின்படி, கோட்டூலுக்குச் செல்லும் ஆண்கள் சேலிக் என்றும், பெண்கள் மோட்டியாரி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இன்றும் கூட, இந்த பழங்குடியினரில் இந்த விதி பின்பற்றப்படுகிறது. இது மிகவும் விசித்திரமான விதி. ஆனால் உண்மை என்னவென்றால், அது இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. 


கலப்பு திருமணம் செய்ய அனுமதி இல்லை


இருப்பினும், இந்த விதி தொடர்பான மேலும் பல விஷயங்களும் நடைமுறையில் உள்ளன. மேலும் அதில் பலவிதமான யோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பழங்குடி தொடர்ந்து இந்த விதியைப் பின்பற்றுகிறது. கலப்பு திருமணம் செய்ய அனுமதி இல்லை. ஆணும் பெண்ணும், தனது இனத்தை சேர்ந்தவரையே  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற  விதி உள்ளது.


மேலும் படிக்க | கொரோனா பயம்... 3 ஆண்டுகளாக வெளியே வரவே இல்லை... நடுங்கவைக்கும் சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ