உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய பிரதேசத்தில் ரயிலில் குண்டு வெடித்ததில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாதி முகமது சைபுல்லை உத்தரபிரதேச போலீசார் துப்பாக்கி சண்டையில் சுட்டுக் கொன்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 10 மணி நேரமாக நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி முகமது சைபுல் கொல்லப்பட்டான். இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களை வேட்டையாடும் பணி தொடங்கி உள்ளது.


இதற்கிடையே தீவிரவாதி முகமது சைபுல் கொல்லப்பட்ட அறையில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், கத்திகள் என பல்வேறு ஆயுதங்களை போலீஸ் பறிமுதல் செய்து உள்ளது. பாஸ்போர்ட்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத கொடி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 


அந்த அறையில் ரயில்களில் கால அட்டவணை அடங்கிய தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.