அஹமத்நகர்: மஹாராஷ்டிர மாநிலம் அஹமந்நகர் பகுதியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியினை போராட்ட களமாய் மாற்றியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஹாராஷ்டிர மாநிலம் அஹமந்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோரிகோன் கிராம பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த சனி அன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வேண்டி அப்பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட வருகின்றனர்.


இச்சம்பவம் குறித்து துணை நிலை காவல் அதிகாரி சோம்நாத் வாகாச்சூர் தெரிவிக்கையில்... கடந்த சனி அன்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது சகோதரி சனி அன்று வீட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதியில் இயற்கை உவாதை காரணமாக சென்றுள்ளனர். வீடு திரும்பிய சிறுமி உடல்நல குறைவால் சோர்ந்து விழ, அவளது பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.


சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுதி வரும்வழிலேயே இறந்துவிட்டதாகவும், சிறுமியின் அந்தரங்க பகுதியில் ரத்த காயங்கள் தென்படுவதால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் சகோதரிக்கும் ஏதும் தெரியாத நிலையில், இக்குற்றச் சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபரினை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


பலியான சிறுமியின் பெற்றோர்கள் கூலி வேலை பார்க்கும் தொழிளாலிகள் எனவும், அவர்களுக்கு நீதி வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் போராட்டத்தில் ஈடுப்ட்டு வருகின்றனர்