தங்களின் மனைவிகளை நண்பருடன் உல்லாசமாய் இருக்க கட்டாயப்படுத்தியதாக 3 பேர் கைது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலத்தில் உள்ள  ஆலப்புழாவில் தங்களுடைய மனைவிகளை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில்  3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


இது குறித்து பெண் ஒருவர் தனது புகாரில்  குறிப்பிட்டிருப்பதாவது: எனது கணவர் டிராவல்ஸ் வைத்துள்ளார். அவர் சமூகவலைதளம் மூலம் கோழிக்கோட்டில் உள்ள ஒருவரிடம் நண்பரானார். பின்னர் அவர் ஒருமுறை எங்கள் வீட்டிற்கும், நாங்கள் ஒருமுறை அவர்களது வீட்டிற்கும் சென்று வந்தோம். அதன் பிறகு எனது கணவர் என்னை அந்த நண்பருடன் செல்லுமாறு வற்புறுத்தினார். இதேபோல் இவரது நண்பர்களது மனைவியையும் கட்டாயப்படுத்தியுள்ளார். நண்பருடன் போகவில்லையென்றால் விவாகரத்து செய்துவிடுவேன் என பயமுறுத்துகிறார். இவ்வாறு அந்த பெண் புகார் அளித்துள்ளார். 


இதனையடுத்து, புகார் அளித்த பெண்ணின் கணவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மிரளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.