ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாளில் தனது சகோதரன் நலமுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி அவருடன் பிறந்த சகோதரிகள் கையில் ராக்கி கட்டி விடுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்தர் குமார் என்பவர் தனது சகோதரி உடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட நேற்று ஹரியானா மாநிலம் சென்றுள்ளார். இதையடுத்து, இரவு பானிபட் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் ரயிலானது ஒரு ரயில் நிலையத்தில் நின்றுள்ளது. 


அப்போது ராஜேந்தர் குமார் கடையில் ஏதோ வாங்குவதற்காக இறங்கினார். அப்போது ரயில் புறப்பட்டதால் ஓடும் ரயிலில் ஏற அவர் முயன்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே ரயிலில் தவறி விழுந்து சம்வ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


சகோதரி உடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாட வந்த போது சகோதரர் பலியான சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.