மணிப்பூர் சட்டப் பேரவைக்கு இன்று முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், 38 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்குத் துவங்கியது. மீதமுள்ள 22 தொகுதிகளுக்கு வருகின்ற மார்ச் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடக்கும் தொகுதிகளில், 1,643 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


மணிப்பூர் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.