அகர்தலா: 59 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டமன்ற தேர்தலில் 42 இடங்களை பிடித்து தனி பெரும்பான்மையுடம் பாஜக ஆட்சி பிடித்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவினை தங்கள் கோட்டையாக வைத்திருந்த கம்யூனிஸ்ட கட்சியினரை வீழ்த்தி பாஜக இந்த வெற்றியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


மொத்தம் உள்ள 59 இடங்களில் பாஜக 42, கம்யூனிஸ்ட 17 இடங்களை பிடிக்க, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது வேதனை. கடந்த ஆட்சியில் திரிபுரா சட்டமன்றத்தில் ஒரு MLA கூட இல்லை, ஆனால் தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது பாஜக.


இந்த வெற்றிக்கு காரணம் பிரதமர் மோடி தான் எனவும், இந்த வெற்றியினை அவருக்கு சமர்பிப்பதாகவும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்!


பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளும், கொள்கைகளுமே இந்த வெற்றிக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.