தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் தற்போது மும்பையில் மழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகுந்த வேகத்தில் காற்று வீசுவதாலும் சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்குவதாலும் பள்ளம் மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 


இன்று அதிகாலை முதல் தொடர் மழையால் மும்பையில் உள்ள தாதர், பரேல், செம்பூர், பாந்த்ரா, அந்தேரி, போரிவலி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளது. நேற்று இரவு மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் தூறலாக பெய்த மழை பின்னர் பலத்த மழையாக பெய்து வருகிறது.