மும்பையில் நவி பகுதியை சேர்ந்த 62-வயது முதியவர் ஒருவர், ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடத்திற்கு அருகில் சமையல் குக்கர் மற்றும் சுத்தியல் கைப்பற்றப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்தில் பலியான முதியவர் வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர்கள் பணத்தினை கொள்ளையடித்து இவ்வாறு செய்திருக்கலாம் என அவரது மகன் தெரிவித்துள்ளார். மேலும் இதேப்போன்ற சம்பவம் அதே கூட்டு குடியிறுப்பு பகுதியில் ஏற்கனவே நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து காவல்துறை தெரிவிக்கையில்... இச்சம்பவத்தில் பலியானவர் பெயர் விஜயகுமார் தோத்ரே எனவும், சம்பவ நாள் அன்று அவரது அலரல் சத்தம் கேட்டு அருகாமை குடியிறுப்பு வாசிகள் விஜயகுமாரின் இறப்பு செய்தியினை காவல்துறையினருக்கு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


சம்பவயிடத்திற்கு காவல்துறையினர் வந்த போது விஜயகுமார் சடத்திற்கு அருகில் சமையல் குக்கர், சுத்தியல் ஆகியவற்றினை மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இச்சம்வத்தில் விஜயகுமாரின் மகன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிகிறது. 


இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக நவி பகுதி காவல்துறை ஆணையர் சுதாகர் பத்தாட்டே தெரிவித்துள்ளார்.