உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில், மர்ம நபர் ஒருவரால் பட்டப்பகளில் கூடார உரிமையாளர் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உபி-யின் லக்னோவை சேர்ந்தவர் ராஜ்குமார் யாதவ்(35), சுபநிகழ்ச்சிகளுக்கும் கூடாரம் அமைக்கும் பணி மேற்கொன்டு வருபவர்.


இவர் இன்று தனது கூடாரத்தில் இருந்தபோது சுமார் 11.45 மணியளவில் மர்ம நபர் ஒருவரால் தீவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இவரது ஒருங்கினைப்பின் கீழ் பணிபுரியும் பலரது குடும்பத்தாருக்கு வருமான ஆதாரம் இவர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று காலை நடைப்பெற்ற இச்சம்பவம், விரின்டவன் காலனியின் சாருஹா பகுதியில் நடைப்பெற்றுள்ளது. 


இச்சம்பவம் குறித்து இவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபரினை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.