மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு 15 வயது மைனர் ஒருவர் யூடியூப் பார்த்து  குழந்தையைப் பெற்றெடுத்தார், பின்னர் அந்த குழந்தையை கொன்று பெட்டியில் அடைத்தார். இது குறித்து போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். நாக்பூரின் அம்பாஜாரி பகுதியைச் சேர்ந்த சிறுமி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தனது தாயிடம் கூறி கர்ப்பத்தை மறைத்து வந்துள்ளார். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து, பிரசவம் குறித்த தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோவைப் பார்த்து பிரசவம் குறித்த தகவல்களை அறுந்து கொண்ட  சிறுமி,  மார்ச் 2 ஆம் தேதி, வீட்டில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார், நாக்பூர் சிறுமி உடனடியாக பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதோடு, சிசுவின்  உடலை வீட்டில் உள்ள பெட்டியில் மறைத்து வைத்தார். பிறந்த குழந்தையின் அழுகை மூலம் அக்கம்பக்கத்தினருக்கு விஷயம் தெரிந்து விடும் என்பதால், அழுதுகொண்டிருந்த குழந்தையை பெல்ட்டால் கழுத்தை நெரித்து அழுவதை நிறுத்தும் வரை மைனர் கொலை செய்துள்ளார். பின்னர் பிறந்த குழந்தையின் உடலை ஒரு பையில் போட்டு மொட்டை மாடியில் வைத்துள்ளார்.


அம்மா வீட்டிற்கு வந்த பிறகு ரகசியம் தெரியவந்தது. சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்ததும், அவரது உடல்நிலை குறித்து விசாரித்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் கூறுகையில், 'அந்த சிறுமி தனது தாயிடம் தனக்கு நேர்ந்த நிலையை விவரித்தார், அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அச்சம் தேவை இல்லை, காவல்துறை உங்களுடன் இருக்கும்: வடமாநில தொழிலாளர்களுக்கு டிஎஸ்பி நம்பிக்கை


சிறுமி, தான் ஆன்லைனில் சந்தித்த ஒரு நபருடன் நட்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அவளை ஒருமுறை அந்த நபர் ஒரு நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று,  மது அருந்தச் செய்த பிறகு சிறுமியை கற்பழித்ததாக கூறப்படுகிறது. 


அம்பாசாரி காவல் நிலைய மூத்த ஆய்வாளர் கஜானன் கல்யாண்கர் இது குறித்து கூறுகையில், அந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்றார்.  “வழக்கில் பல கேள்விகள் குறித்து போலீசார் இன்னும் விட தேடி வருகின்றனர். மைனர் மற்றும் அவரது தாயாரின்  கூறிய முதல் கட்ட தகவல்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் விரிவான விசாரணை தேவை,” என்றார்.


இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு கொலை வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று அதிகாரி கூறினார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.


மேலும் படிக்க | வடமாநிலத்தவர்கள் இல்லாததால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ