மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற எம்.பிக்கள் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினமான அக்டோபர் 2, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31 ஆகிய தேதிகளை முன்னிட்டு பாஜக எம்.பிக்கள் 150 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்களையும் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.  


பாஜகவின் அமைப்பு பலவீனமாக உள்ள தொகுதிகளுக்கு விஜயம் செய்யுமாறு மாநிலங்களவை உறுப்பினர்களை மோடி கேட்டுக்கொண்டார் என்று அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கூறினார். "இந்த யாத்திரைகள் கிராமங்களின் மறுமலர்ச்சி மற்றும் அவற்றை தன்னம்பிக்கை, தோட்ட உந்துதல் மற்றும் பூஜ்ஜிய பட்ஜெட் விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்" என்று அவர் கூறினார்.


"மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும்" என்று ஜோஷி கூறினார். “ஒவ்வொரு தொகுதியிலும் பதினைந்து முதல் 20 அணிகள் உருவாக்கப்படும். அவர்கள் தினமும் 15 கி.மீ பாதயாத்திரையை மேற்கொள்வார்கள். எம்.பி.க்கள் காந்தி ஜி, சுதந்திர போராட்டம், மரம் வளர்ப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்கள். அதை செயல்படுத்த கட்சி அளவிலான குழு இருக்கும்” என்றும் அவர் கூறினார். 


மேலும், டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில், ஒவ்வொரு பாஜக எம்.பிக்களும் தங்களது தொகுதியில் குழுக்கள் அமைத்து நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த நடைபயணத்தில் கிராமப்புற மேம்பாடு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டவைகள் முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம் காந்திய சிந்தனைகள் பரப்பப்பட முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.