அரசு பேருந்து ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.


இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஊழியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் 49 ஆயிரத்து 340 பேர் பணியாற்றும் தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தில் அரசின் எச்சரிக்கைக்குப் பின்னர் வெறும் ஆயிரத்து 200 பேர் மட்டுமே பணிக்குத் திரும்பினர். இதனால் அம்மாநிலத்தில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது.


இந்நிலையில் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகளுடன் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசாங்கத்துடன் இணைக்கக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (RTC) ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.


எந்தவொரு சூழ்நிலையிலும், ஆர்டிசி அரசாங்கத்துடன் இணைக்கப்படாது, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசாங்கம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாது "என்று ராவ் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார். RTC ரூ .1,200 கோடிக்கு இழப்பைச் சந்தித்து வருவதாகவும், போக்குவரத்துக் கழகம் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் இருக்கும் போது, வேலைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும், தசரா உள்ளிட்ட பண்டிகைக் காலகட்டத்தில் வேலைநிறுத்தம் செய்வது பெரும் குற்றம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ராக் மேலும் கூறுகையில்; பிளாக்மெயில் தந்திரோபாயங்கள், ஒழுக்கமின்மை மற்றும் அடிக்கடி உருவாக்கும் செயல்களுக்கு நிரந்தர முடிவு இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியான கருத்தை கொண்டுள்ளது.