ஒடிசாவின் கலாஹன்டி மாவட்டத்தைச் சேர்ந்த தானா மஜ்கி என்பவரின் மனைவி காசநோயால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் ஆகஸ்ட் 23-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் மனைவியின் உடலை 60 கி.மீ., தொலைவில் இருக்கும் தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் உதவி கேட்டுள்ளார் மஜ்கி. அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.


மகாபிரயாணா என்ற திட்டத்தின் மூலமாக வசதி இல்லாதவர்கள் இலவசமாக இறந்தவரின் உடலை தங்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக அரசு மருத்துவமனைகளில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.


வேறுவழியின்றி துணியால் தனது மனைவின் உடலைச்சுற்றி தோளில் சுமந்து கொண்டு 10 கி.மீ., நடந்தே சென்றுள்ளார். இந்த தகவல் பத்திரிக்கையாளர்கள் மூலம் கலெக்ட்ற்கு தெரிய வர உடனடியாக மஜ்கிக்கு ஆம்புலன்ஸ் உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிசடங்கிற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு தாசில்தாருக்கும் உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.


இந்த பரிதாப நபரின் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருவதோடு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வீடியோ:-