கேரளாவில் உயர்ந்து வரும் எரிபொருள் விலையை கண்டித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி, மாநிலம் முழுவதும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து கேரளா முழுவதும் வெறிச்சோடி காட்சியளிக்கின்றது. 



"மக்கள் விரோத கொள்கைகளை" எதிர்க்கும் வகையிலும், பெட்ரோல் விலையில் செங்குத்தான உயர்வுக்கு எதிராகவும் இந்த வேலைநிறுத்தம் கடைபிடிக்கப் படுகிறதாக ஐக்கிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.


இதனையடுத்து இன்று நடக்கவிருந்த கேரள பல்கலைக்கழகம், எம்.ஜி. பல்கலைக்கழகம் மற்றும் கண்ணூர் பல்கலைக்கழகம் தேர்வுகள் அனைத்து தள்ளிவைக்கப்பட்டுள்ளன.