பாஜக-வுக்கு நல்லவர்கள் யார் வந்தாலும் அவர்களை ஏற்று கொள்வோம் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரச்னையை மோடி அரசு கட்டுப்படுத்தும்.


அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லவர்கள் யார் வந்தாலும் அவர்களை பாஜக ஏற்று கொள்வோம். மேலும் ரஜினிகாந்துக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கின்றன.


இவ்வாறு அவர் கூறினார்.


ரஜினிகாந்த் அரசியல் விஷயங்களில் முன்நோக்கி நகர்வதற்கு முன்னதாக அவர் அரசியலில் இணைய வேண்டும் என்றும் பேசியுள்ளார் அமித் ஷா.