குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக தெரிவிக்க 52 லட்சம் பேர் மிஸ்டுகால் மூலம் ஆதரவு தெரிவித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CAA-க்கு எதிராக தேசிய தலைநகரம் மற்றும் உத்தரப்பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புக்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. உத்தரபிரதேசத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் கலவரம் மற்றும் தீ விபத்து என சீரழிந்து, சில இடங்களில் காவல்துறை ஒடுக்குமுறையுடன் மோதல்கள் ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கடந்த மாதம் போராட்டங்கள் வெடித்ததில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.


CAA ஆனது தேசிய குடிமக்களின் பதிவேடு (NRC) உடன் இணைந்து முஸ்லிம்களை பணமதிப்பிழப்பு செய்வதற்கான ஒரு சூழ்ச்சி என்று எதிர்க்கட்சி கருதுகிறது. இந்த ட்டத்திற்கு சில எதிர்கட்சியினர் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள், பொய் பிரசாரம் செய்வதாக, பாஜக குற்றம்சாட்டி வருகிறது.


அந்தவகையில் இந்த சட்டம் தொடர்பான சந்தேகங்களை நீக்க பாஜக நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறது. இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர், 88662 88662 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் 'மிஸ்டுகால்' கொடுத்து ஆதரவு தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், டெல்லியில் நடந்த பேரணியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூறுகையில், இந்த சட்டம், குடியுரிமை வழங்குவது தான், பறிப்பது இல்லை. எதிர்க்கட்சிகள் நாட்டை தவறாக வழிநடத்துகின்றன. இந்த மிஸ்டுகால் மூலம் இதுவரையில் மொத்தம் 52 லட்சம் அழைப்புகள் வந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர் என்றார்.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.