மத்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து சாதனைகள் புரிந்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இவை பொதுவாக பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலாசாரம், இசை, நடனம், ,அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.


பதம் விபூஷண் 7 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் அவர்களுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. பத்ம பூஷண் 10 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ 102 பேருக்கு வழங்கப்படுகிறது. அதில் மொத்தம் தமிழகத்தை சேர்ந்த 11 பேருக்கு விருது கிடைத்துள்ளது. 


பத்மா விபூஷன்
1. திரு.எஸ்.பி பாலசுப்பிரமணியம்


பத்மா ஸ்ரீ:
1. செல்வி. பி.அனிதா (விளையாட்டு)
2. திரு.சுப்பு ஆறுமுகம் (கலை)
3. திரு. சாலமன் பப்பையா (இலக்கியம் மற்றும் கல்வி- பத்திரிகை)
4. திருமதி. பாப்பம்மாள் (விவசாயம்)
5. திருமதி. பம்பாய் ஜெயஸ்ரி ராம்நாத் (கலை)
6 .. திரு.கே.சி சிவசங்கர் (மரணத்திற்குப் பின்- கலை)
7. திரு. மராச்சி சுப்புராமன் (சமூக பணி)
8. திரு.பி. சுப்பிரமணியன் (மரணத்திற்குப் பின்-வர்த்தக மற்றும் தொழில்)
9. டாக்டர். திருவேங்கடம் வீரராகவன் (மரணத்திற்குப் பின்-மருத்துவம்)
10. திரு.ஸ்ரீதர் வெம்பு (வர்த்தகம் மற்றும் தொழில்)



ALSO READ | நம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே விளைய வேண்டும் - சத்குரு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR