ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாகட்டி சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை சுமார் 8 மணியிலிருந்து அதிநவீன ராக்கெட்டுகள் தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக கைத்துப்பாக்கிகளால் இங்குள்ள இந்திய நிலைகளின்மீது ஆவேச தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்து வருவதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.


இன்றைய தாக்குதலில் ராணுவத்தை சேர்ந்த ஒரு அதிகாரியும், எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் ஒருவரும் வீரமரணம் அடைந்ததாக ஸ்ரீநகரில் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த தாக்குதலில் மேலும் ஒருவீரர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.