ஜிஎஸ்டி எல்லைக்குள் பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டு வருவது, அதிக லாப விகிதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெட்ரோலியப் பொருள் விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வரும் 13-ம் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த சங்கம் மும்பையில் நடத்திய ஆலோசனையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், பெட்ரோலிய பொருட்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறையைக் கைவிட வேண்டும்.


பெட்ரோலியப் பொருட்களை நேரடியாக வீடுகளில் விநியோகிக்கும் திட்டத்தைக் கைவிடுதல் வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியா விலையைக் கடைபிடிக்கும் விதமாக பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.