நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த நிலையில் இன்று முதல் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் கூட்டத்தொடரில் பங்கேற்கச் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி:-


ஜிஎஸ்டியின் நோக்கமே (growing stronger together) பலத்தை வளர்ப்பதற்கான ஒற்றுமை என்று கூறியுள்ளார். இதே நம்பிக்கை நடப்பு கூட்டத் தொடரிலும் பிரதிபலிக்கும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார். 


மேலும் நாடு முழுவதும் பருவநிலை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் நல்ல சாகுபதி செய்ய வேண்டும் என்று நம்புவதாகவும், பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.