பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளியை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்தோ - திபெத்திய எல்லை போலீஸ் படையினருடன் நாளை தீபாவளி கொண்டாடுகிறார். இப்பகுதி சீன எல்லையில் அமைந்துள்ளது. பிரதமருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் செல்கிறார். தீபாவளி கொண்டாடத்தை முடித்துக்கொண்டு புகழ்பெற்ற புண்ணிய தலமான பத்ரிநாத் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.


நரேந்தர் மோடி அவர்கள் பிரதமர் பதவி 2014-ம் ஆண்டு ஏற்ற பிறகு, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ராணுவத்தினருடன் கொண்டாடு வருகிறார். தனது முதல் தீபாவளியை சியாச்சின் பனி மலையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியில் தீபாவளி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.