ஐந்து நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். 


தனது முதல் பயணமாக ஆப்கானிஸ்தான் செல்கிறார். இன்று ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்த பிறகு நாளை சுவிட்சர்லாந்து செல்கிறார். திங்கட்கிழமை அமெரிக்கா செல்லுகிறார். அமெரிக்க செல்லும் மோடி அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றுவார். 8-ம் தேதி அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ செல்கிறார். மெக்சிகோவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அன்று மாலையே அங்கிருந்து இந்தியா திரும்புவர் என தகவல் கிடைத்துள்ளது..