புது டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவின் 9-வது நாளில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டியது. நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை காலை 9 மணிக்கு குடிமக்களுடன் வீடியோ செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.


 



பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் வீடியோ மாநாட்டை நடத்தி, லாக்-டவுனில் இருந்து நாடு எவ்வாறு சீராக வெளியே கொண்டு வருவது குறித்த ஆலோசனைகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். 21 நாள் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடையும்.


"அடுத்த சில வாரங்களில், சோதனை, தடமறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்று பிரதமர் மோடி முதலமைச்சர்களிடம் கூறினார்.


இதற்கிடையில், உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை வேகமாக ஒரு மில்லியனை நெருங்குகிறது. "கடந்த ஐந்து வாரங்களில் புதிய வழக்குகளின் எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மற்றும் கடந்த வாரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது" என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஒரு மெய்நிகர் செய்தி மாநாட்டில் தெரிவித்தார். 


"அடுத்த சில நாட்களில் உலகளவில் 1 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளையும் 50,000 இறப்புகளையும் அடைவோம்" என்று அவர் கூறினார்.