தெற்கு டெல்லியின் ஹூஸ் காஸ் பகுதியில் தற்கொலை செய்துக்கொண்ட விமான பணிப்பெண், வரதட்சனை கொடுமையால் தான் தற்கொலை செய்துக்கொணாடார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று மாலை 4.30 மணியளவில் தெற்கு டெல்லியின் ஹூஸ் காஸ் பகுதியில் அனிஷா பத்ரா(39) என்ற பெண்மனி வீட்டி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.


ஜெர்மன் விமான நிலையத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் இவரின் மறணத்திற்கான காரணம் குறித்து மர்மங்கள் நிலவி வந்த நிலையலில், இன்று அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் இவரது மரண வாக்குமுலம் கிடைத்துள்ளது, அதில் அவர் தன் குடும்பத்தார் தன்னிடம் வரதட்சனை கேட்ட கொடுமை படுத்துவதாக தெரிவித்துள்ளார். 



அனிஷா பத்ரா இறப்பதற்கு முன்னதாக தனது தற்கொலை விருப்பத்தினை குறித்து தனது கணவருக்கு செய்தி அனுப்பியுள்ளார். பின்னர் அவர் இருக்கும் இடம் குறித்தும் இதுவரை தகவல்கள் இல்லை.


இதனையடுத்து அனிஷாவின் கனவர், அவரது குடும்பத்தாரின் மீது மேக்ஸ் காவல்துறையினர் 420-B பிரிவின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும் பலியான அனிஷாவின் உடல் ப்ரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.