புதுச்சேரி பார் அசோசியேஷன் சார்பில் 72-ஆம் ஆண்டு சட்டநாள் விழா தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா, டிக்கா ராமன், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பாக பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் வழங்கப்பட்டு வரும் வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஜனவரி 1 முதல் முன்பதிவு.. குழந்தைகளுக்கான தடுப்பூசி பதிவு செய்வது எப்படி?


மேலும், புதுவையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்த அவர், ஆனால் அவற்றையெல்லாம் பல்வேறு காரணங்களால் நிரப்ப முடியவில்லை என்று கூறினார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்றும் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார். 


தொடர்ந்து பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கேட்டு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தினோம், ஆனால் கடைசியில் பெட்ரோல் செலவுகள் ஆனது தான் மிச்சம் என்றும் தன் ஆதங்கத்தைக் கொட்டினார். மேலும், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைத்தால் சிறந்த ஆட்சியை கொடுத்து மாநிலம் முன்னேற்றமடையச் செய்ய முடியும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.


ALSO READ | ALSO READ |  கோவிட்-19 தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா? நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR