பாராளுமன்றத்தின் மேல் சபைக்கு புதிய நான்கு எம்.பி.,க்களை நியமித்து உத்தரவிட்டார் குடியரசு தலைவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவுக்கு நான்கு புதிய எம்.பி.,க்களை நியமித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். அவர்கள் விவசாய சங்க தலைவர் ராம் ஷகால், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ராகேஷ் சின்ஹா, பரத நாட்டிய கலைஞர் சோனல் மான்சிங், சிற்ப கலைஞர் ரகுநாத் மோகபத்ரா ஆவார்கள். 


ஏற்கனவே எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டு இருந்த வழக்கறிஞசர் பராசரன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா, அனுஷ்ஹா ஆகியோரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் புதிய எம்.பி.,க்களை நியமித்து உத்தரவிட்டார் குடியரசு தலைவர்.