நாட்டின் 15வது குடியரசுத் தலைவர் தேர்வுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்த நிலையில், தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும். முன்னதாக, நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முடிந்து வாக்கு பெட்டிகள் நாடாளுமன்றம் வளாகம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் உள்ள அறை எண் 63-ல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு யஷ்வந்த் சின்ஹாவை எதிர்த்து முதல் சுற்றில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளார். திரௌபதி முர்மு 3,78,000 வாக்குகள் மதிப்பிலான, 540 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 1,45,600 மதிப்பிலான 208 வாக்குகளும் பெற்றுள்ளனர். இவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலுத்திய வாக்கின் புள்ளிவிவரங்கள். குடியரசுத் தலைவர் தேர்தலில்15 எம்.பிகளின் வாக்குகள் செல்லாதவை என தகவல்கள் வெளியாகியுள்ளது.



மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் ‘அழிக்க’ முடியாத சிறப்பு ‘MARKER PEN’


இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஆளும் கட்சியான பா.ஜ.க. தனது தரப்பில் திரௌபதி முர்முவையும், எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் யஷ்வந்த் சின்காவையும் வேட்பாளராக நிறுத்தின.


மேலும் படிக்க |  நீண்ட கால குடியரசுத் தலைவர் முதல் போட்டியின்றித் தேர்வானவர் வரை - இந்தியக் குடியரசுத் தலைவர் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ