பிரதமர் நரேந்திர மோடி, வரும் அக்டோபர் 20-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத் கோவிலுக்கு செல்லவிருக்கின்றார். கடந்த ஐந்து மாதங்களுக்குள், பிரதமர் நரேந்திர மோடி இக்கோவிலுக்கு செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்பயனத்தின் போது அங்குள்ள இராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளியை கொண்டாடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.


செய்தி நிறுவனங்களின் தகவல்களின் படி, சீன எல்லைப் பகுதியில் இருக்கும் இந்திய இராணுவம் மற்றும் இந்திய திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) படையினர் ஆகியோருடன் பிரதமர் மோடி தீபாவளியினை கொண்டாடுவார் என தெரிகிறது.


மேலும் இந்த தீபாவளி பயனத்தில் பல்வேறு திட்டங்களும் தொடங்கள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


இருப்பினும், பிரதமரின் இந்த பயனத்தின் கால அட்டவணையைப் பற்றி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட வில்லை!