காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை மகிசாசுரன் போல் சித்தரித்து பாஜக கட்சி ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் கிழக்கு உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி பதவியேற்றார். அவர் அங்கு பொறுப்பேற்றது முதல் கடுமையான விமர்சனங்களை பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.


தற்போது பாஜக சார்பில் பாரபங்கி பகுதியில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் பிரியங்கா காந்தி மகிசாசுரன் போன்றும், பாஜகவை சேர்ந்த பிரியங்கா ராவத் துர்க்கை அம்மன் போல் காட்சியளிப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. 
பாரபங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த போஸ்டர் குறித்து ANI செய்தி நிறுவனம் பிரியங்கா ராவத்திடம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த அவர் நீங்கள் கூறி தான் எனக்கே இந்த விஷயம் தெரியும். இதை செய்தவர்கள் யார் என்று விரைவில் கண்டுபிடிப்பேன் எனக் கூறினார்.