மும்பை: பாலிவுட் பிரபல நடிகையாக வலம் வந்த வீணா கபூர் கொலை வழக்கில் சொத்து தகராறு காரணமாக அவரது மகன் சச்சின் கபூரே தாயை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 74 வயது நடிகை வீணா கபூரின் மகன் சச்சின், தனது தாயின் தலையை பேஸ்பால் மட்டையால் பலமுறை அடித்து கொலை செய்தார். பிறகு அம்மாவின் சடலத்தை ஆற்றில் வீசினார். விசாரணைக்குப் பிறகு நடிகையைக் கொன்றதற்காக ஜூஹூ போலீசார் நடிகை வீணாவின் மகன் சச்சின் மற்றும் வேலைக்காரன் சோட்டு என்ற லாலுகுமார் மண்டல் ஆகியோரை கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை வீணா கபூரை காணவில்லை என அவர் குடியிருந்த கல்பதரு சொசைட்டியின் பாதுகாப்பு மேற்பார்வையாளர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் ஜூஹூ போலீசார் விசாரணை நடத்தினர். புலன் விசாரணையின் போது, வீணாவின் ஃபோன்அவரது அபார்ட்மெண்டிற்கு அருகிலேயே கிடைத்தது. 


விசாரணையில், நடிகையின் மகன் சச்சின் (43), சோட்டு (25) ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சச்சின் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தாயுடன் சொத்து தகராறு இருப்பதாக ஒப்புக்கொண்டார்.


ஒரு கட்டத்தில், தகராறு வெறியாக மாறி சொத்துக்காக பெற்ற தாயையே கொல்லும் அளவுக்கு மாறிய சச்சினின் வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வீணாவின் உடல் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் வீசியதையும் கேட்டு பாலிவுட்டே அதிர்ந்து போய்விட்டது. பிரபல இந்தி நடிகை வீணா கபூர் தனது சொந்த மகனால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | பயங்கரம்! வேலைக்கா போற.. மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்


‘மிட்டர் பியாரே நு ஹால் முரீடன் டா கெஹ்னா', 'டல்: தி கேங்' மற்றும் 'பந்தன் பெரோன் கே' ஆகிய இந்தி படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பழம் பெரும் நடிகை வீணா கபூர். இவர் பிரிட்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி  அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.


74 வயதான அவர் மகாராஷ்ட்ரா மாநிலம் ஜூஹுவில் உள்ள கல்பதரு சொசைட்டியில் வசித்து வந்தார்.பல கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பாக தாயுடன் தகராறு செய்த மகனின் கொடூரச் செயல், உயிர் கொடுத்த தாயின் உயிரையே பறித்துவிட்டது.


வீணாவின் மூத்த மகன் சச்சின் கபூர் கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் இருந்ததால், தனது வீட்டை காலி செய்துவிட்டு வீணாவின் வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். அமெரிக்காவில் வசித்து வரும் வீணாவின் மற்றொரு மகன், போன் செய்தபோது போன் எடுக்கவில்லை. பல முறை முயன்றும், யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், ஜூஹூ காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


மேலும் படிக்க: அதிர வைக்கும் காதல் கொலை! 5வது காதலனைக் கொல்ல உதவிய 4 காதலர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ