காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 


ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். 


இதையடுத்து, உச்சநீதிமன்றம் இந்த நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை வருகின்ற ஏப்ரல் 9-ம் தேதி விசாரிக்க உள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில்,  மத்திய அரசின் 3 மாத கால அவகாச மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்றது. இந்த மனுவை தமிழகம் தாக்கல் செய்த மனுவான நீதிமன்ற அவமதிப்பு மனுவுடன் சேர்த்து வருகின்ற 9-ம் தேதி விசாரிக்க உள்ளதாக தெரிவித்திருந்தது. 


தற்போது, காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது புதுச்சேரி அரசும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.