பொதுவாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயிலில் விற்கப்படும் டீ, காபி வாங்கி குடிப்பார்கள். ரயில்வே டீ, காபி வாங்கி குடிக்கும் போதெல்லாம் இனி இது தான் ஞாபகம் வரும் போல் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வேயில் டீ, காபி விற்கும் சில ஊழியர்கள் டீ, காபியில் கூடுதலாக தண்ணீரை கலப்பதற்காக ரயிலில் உள்ள டாய்லெட்டில் இருந்து தண்ணீரை பிடித்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ பார்த்து வரும் மக்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.


அந்த வீடியோவில் ஏன் டாய்லெட்டில் தண்ணீரை பிடிக்கிறீர்கள் என வீடியோ எடுத்த நபர் கேட்டதற்கு சிரித்துக் கொண்டே அந்த ரயில்வே ஊழியர் சென்று விட்டனர்.