சேதுசமுத்திர வழக்கு: மத்திய அரசுக்கு 6 வாரம் கெடு!
ராமர் பாலம் வழக்கில் 6 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமர் பாலம் வழக்கில் 6 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேதுசமுத்திர திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், 6 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களால் இவ்வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கி இவ்வழக்கின் விசாரணை நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இவ்வழக்கில் 6 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.